சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளைப் பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மொத்த ஒதுக்கீடு ரூ. 57 பில்லியன் தீரும் வரை எரிபொருள் மானியத் திட்டம் செயல்படுத்தப்படும். பலர் நம்புவது போல் மாத இறுதியில் இது தானாகவே நிறுத்தப்படாது. ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவுக்கு ஏற்ப மானியம் தொடர்ந்து நீடிக்கும்.
மானியம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு
இருப்பினும், இந்த மானியம் தொடருமா இல்லையா என்பதை அரசாங்கம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாரபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, தற்போதைய எரிபொருள் விலைகளை பராமரிக்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு பரல் டீசலின் விலை 125 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இந்த உலக சந்தை விலை நீண்ட காலத்திற்கு நிலையாக இருந்தால், கூடுதல் அரசாங்க மானியங்களை அதிகம் நம்பாமலேயே தற்போதைய உள்ளூர் விலைகளை பராமரிக்க வாய்ப்புள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வரை விலை டாலர் 125 வரை குறைந்துள்ளதால், தற்போதைய விலை வரம்புகளுக்குள் எரிபொருளை வழங்கும் திறன் எங்களுக்கு உள்ளது.
உலக சந்தையில் விலை நிலவரம்
ஆனால் அது சராசரி மதிப்பாக இருக்க வேண்டும். அந்த விலை மட்டம் தொடர்ந்து நீடித்தால் மானியம் இல்லாமலும் தற்போதைய விலையிலேயே எரிபொருளை வழங்க முடியும். எனினும், குறுகிய கால சந்தை மாற்றங்களின் அடிப்படையில் விலை திருத்தங்களை செய்ய முடியாது.
நிலையான கொள்கை ரீதியான முடிவு எடுப்பதற்கு உலக சந்தையில் எண்ணெய் விலை சராசரி மதிப்பாக தொடர்ந்து இந்தக் குறைந்த மட்டத்தில் நிலைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

