நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து திங்கட் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது