மாத்தளை – வில்கமுவ பிரதான வீதியில் எலோனாகந்த பகுதியில் எரிபொருள் கொள்கலன் தாங்கிவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், கொள்கலன் தாங்கிவூர்தியில் இருந்த எரிபொருள் கசியத் தொடங்கியது. இதையடுத்து அந்த இடத்தில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தடுக்க காவல்துறையினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சாரதியின் கவனயீனத்தால் வீதியோரத்தில் உள்ள உயர் மின் அழுத்த கம்பத்துடன் குறித்த கொள்கலன் தாங்கிவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் மஹியங்கணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.