குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஆர்.பி.கே.பெருந்தோட்டயாக்கத்திற்க்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இடம் பெற்று உள்ளது.
தோட்ட தொழிலில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து கொட்டியதால் மூன்று ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்
இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது