ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையில், இன்றும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த தகவல் பாமர மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், நேற்றைய தினத்தில் கிராம் ரூ9,960 ஆகவும் சவரன், ரூ 79,680 ஆகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து 9,130 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 320 ஆல் அதிகரித்து, 73,040 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த வருடங்களில் 60 ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, தற்போது 70 ஆயிரத்தை தாண்டி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
இன்று கிராமுக்கு ரூ.114ஆகவும், கிலோவிற்கு ரூ.1,14,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.
வெள்ளியும் தங்கத்தை போன்று நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அதிகரித்துள்ளது.

