கண்டி மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது.
இந்த நீர்த் துண்டிப்பு, கண்டி குட்ஷெட் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின்போது நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமல்படுத்தப்படுவதாக மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் மே 30ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
பேராதனை வீதி, வில்லியம்கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலிருந்து நகர சபை சந்திப்பு வரை, அஸ்கிரிய, குள சுற்றுவட்டம், ரஜ பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய, கண்டி நகர மையத்தில் உள்ள அனைத்து வீதிகள்
சேதமடைந்த நீர் விநியோக அமைப்பை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சேமித்துள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாநகர சபை வலியுறுத்தியுள்ளது.
இந்த நீர்த் துண்டிப்பு காலத்தில் பொதுமக்கள் தேவையான முன்கூட்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

