மத்திய கிழக்கில் உள்ள கூட்டுப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு குழுக்களால் ஏவப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பிரித்தானிய விமானப்படையினர் (RAF) சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஈராக்கில் உள்ள கூட்டுப்படைத் தளம் ஒன்றின் மீது ஈரான் ஆதரவு குழுக்களால் நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களைப் பிரித்தானியாவின் ராயல் விமானப்படை (RAF) முறியடித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஏப்ரல் தொடக்கம் வரையிலான சுமார் ஆறு வார காலப்பகுதியில் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஒரு நாளைக்குச் சராசரியாக 28 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இந்தத் தளத்தைக் குறிவைத்து ஏவப்பட்டன.
பிரித்தானியாவின் ராயல் விமானப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள், அதிநவீன ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளைப் (Counter-drone missile systems) பயன்படுத்தி, வான்பரப்பிலேயே 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தித் தகர்த்துள்ளனர்.
மத்திய கிழக்கில் தற்காப்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியப் படையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலின் தீவிரம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏப்ரல் தொடக்கத்தில் வாஷிங்டன் மற்றும் தேஹ்ரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்த உடன்பாடு எட்டப்படும் வரை இந்த கடும் மோதல்கள் நீடித்தன.

