பொலன்னறுவை மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் 36% வரை மேலும் குறைவடைந்துள்ளது.
அந்நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 110,000 ஏக்கர் அடி ஆகும் என்பதுடன், அது தற்போது 40,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளது.
எப்படியிருப்பினும், மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து இம்முறை சிறுபோகச் செய்கைக்கான வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளது.
பொலன்னறுவையின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது.
அதன் மொத்தக் கொள்ளளவு 116,000 ஏக்கர் அடி ஆகும் போதிலும், தற்போது அது 63,000 ஏக்கர் அடி வரை குறைவடைந்துள்ளதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் 56% ஆகும்.
தற்போது சிறுபோகச் செய்கைக்காக அந்நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதேபோல் 21,600 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாகக் குறைவடைந்து வருவதுடன், தற்போது அது 8,500 ஏக்கர் அடியை விடக் குறைவடைந்துள்ளது.
எப்படியிருப்பினும், அந்நீர்த்தேக்கத்திலிருந்தும் சிறுபோகச் செய்கைக்காக நீர் திறந்துவிடும் நடவடிக்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

