பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.

