மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று (13) தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தாவதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் தற்போது மேற்கொண்டு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் ஷெரீப் மேலும் குறிப்பிட்டார்.

