2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) இரவு அல்லது நாளை அதிகாலைக்குள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக்கட்ட நடவடிக்கைகள்: பரீட்சை திணைக்களம் தற்பொழுது பெறுபேறுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.
பெறுபேறுகளைப் பார்வையிட: மாணவர்கள் தமது பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களான http://www.doenets.lkஅல்லது http://www.results.exams.gov.lkஆகிய முகவரிகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

