2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர்வதற்கு இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது.
இந்த உதவித்தொகைகளை வழங்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் நடைபெற்றது. குறித் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன, ”2025ஆம் ஆண்டுவரை 165க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இப் புலமைப்பரிசில்கள் பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், கல்வி, முகாமைத்துவம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இப் புலமைப்பரிசில் திட்டம் இலங்கை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, சீனா–இலங்கை கல்வி மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

