வாகரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டலடி – புளியன்கண்டலடி வீதியில் ஆணொருவரின் சடலம் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
39 வயதுடைய, கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 26 ஆம் திகதி இறால் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (28) அவரது சடலம் கண்டலடி பகுதியில் மீட்கப்பட்டது.
சடலம் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைத்து மரண விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மரணம் இயற்கையானதா அல்லது கொலையா என்பதற்கான உறுதிப்படுத்தல் இதுவரை வழங்கப்படவில்லை. சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

