மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், அவற்றை அறிவிப்பதற்காக ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது மற்றும் அந்த அமைப்பை அணுகுவது ஆகியவை குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் அல்லாத பிற நபர்களால் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்
இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும், இந்த மின்னணு அமைப்பின் பயன்பாட்டிலும் சம்பந்தப்பட்ட நபர்களால் தவறான தகவல்களும் தவறான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுவதை ஆணைக்குழு இதுவரை அவதானித்துள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஆணைக்குழுவால் அல்லது அதன் அதிகாரிகள் அல்லாத பிற வெளி நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்பதை குறித்த அறிவிப்பின் மூலம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பான எந்தவொரு சிக்கல்களையும், ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவின் 0767011954 மற்றும் 0112587284 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.
இதனடிப்படையில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

