கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 18 இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தந்தை-மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே, மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் 20 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

