கடுகண்ணாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறி, கணவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந் நிலையில் காணாமல்போன பெண்ணை தேடுவதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்ற பெண்
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி, காணாமல்போன பெண்ணின் கணவரால் கடுகண்ணாவை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவி குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதுடன் , பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

