இந்த ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,723 பரீட்சை நிலையங்களில், இன்று காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு சிங்கள மொழி மூலம் 220,366 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 73,723 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
294,089 மாணவர்கள்
அதன்படி, மொத்தம் 294,089 மாணவர்கள் இம்முறை 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில், பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

