நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் கையிருப்பை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அண்ணளவாக 115,000 மெற்றிக்தொன் நெல்லில், போதியளவு பாதுகாப்பு இருப்புத் தொகையைப் பேணிக்கொண்டு எஞ்சியவற்றை விற்பனை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்குத் தேவையான களஞ்சிய வசதிகள் மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும்.
முறையான விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து இந்த நெல் இருப்பை விற்பனை செய்ய கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

