தேசியத் தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நடந்த அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததுடன், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதன் அதிர்ச்சியில் இருந்து டெல்லி இன்னும் மீண்டு வரும் நிலையில், பயங்கரவாத சம்பவத்தின் விவரங்களை அதிகாரிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
திங்கட்கிழமை மாலை 6:52 மணியளவில் பரபரப்பான லால் குய்லா மெட்ரோ நிலையத்திற்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில், நகரின் மிகவும் பலத்த பாதுகாப்பு மண்டலங்களில் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதுடன், பல வாகனங்களும் சேதமடைந்தன.
இதை ஒரு பயங்கரவாத சம்பவமாக விசாரிக்க, இந்திய தேசிய புலனாய்வு முகாமை (NIA) மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வகம் உட்பட பல நிறுவனங்களின் புலனாய்வாளர்களை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
புதன்கிழமை பூட்டானில் இருந்த நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்களை டெல்லி வைத்தியசாலையில் சந்தித்தார்.
பின்னர் மாலையில், மத்திய அமைச்சரவை குண்டுவெடிப்பை ஒரு பயங்கரவாத சம்பவம் என்று கூறி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேலும் அதன் மண்ணில் எந்த வகையான பயங்கரவாதத்தையும் பொறுத்துக்கொள்ளாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

