கொரோனா தொற்ரின் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து முதல் முறையாக சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ள நிலையில், குறித்த சீனப் பயணிகளுக்கு விமானநிலையத்தில் வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) இரவு வந்த 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 7 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் என கூறப்படுகின்றது.
விமானநிலையத்தில் வரவேற்பு
இந்த சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று ஷாங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் எம்.யூ. 231 விமானத்தின் ஊடாக புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் சீன சுற்றுலாப் பயணிகளை வரவேற்றனர்.
அதேவேளை கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதன் பின்னர், சீனப்பயணிகள் இலங்கைக்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.