தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம் மனைவி ஒருவர், துயரமான முறையில் உயிரிழந்தார்.
பனமுர பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்த இளம் பெண், யக்மதித்த பகுதியின் புலுத்தோட்டத்தைச் சேர்ந்த தில்ஹாரா செவ்வண்டி ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா….
கடந்த 12-ஆம் திகதி, கணவன்-மனைவி இருவரும் பனமுரவில் அமைந்துள்ள பெண்ணின் பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அவர்களைச் சந்தித்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றிருந்தனர்.
எனினும், பெற்றோரைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில், அந்த முச்சக்கர வண்டிக்குள் எதிர்பாராத விதமாக ஒரு மோதல் வெடித்தது. கணவரின் நடத்தை குறித்து மனதில் புகைந்துகொண்டிருந்த சந்தேகம் வார்த்தைகளாக வெளிப்பட்டபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
கோபத்தையும் வேதனையையும் தாங்கிக்கொள்ள முடியாத அவர், வண்டியிலிருந்து குதித்துவிடுவதாக மிரட்டினார். அத்தஓடு கணவர் சிந்திப்பதற்குக்கூட அவகாசம் அளிக்காமல், ஓடிக்கொண்டிருந்த அந்த முச்சக்கர வண்டியிலிருந்து திடீரென பிரதான வீதிக்குக் குதித்தார். கடுமையான காயங்களுக்கு உள்ளான தனது மனைவியை, கணவர் உடனடியாக பனமுர வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், அவர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் பல நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
உயிரிழந்த தில்ஹாரா, ஒரு குழந்தையின் தாயாவார். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் கணவரை பனமுர பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
கணவர் அளித்த வாக்குமூலத்தின்படி, தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத வேறொரு பெண் குறித்து, தனது மனைவி மனதில் கொண்டிருந்த நியாயமற்ற சந்தேகமே இந்த வாக்குவாதத்திற்கு வித்திட்டது.
உண்மையில் கள்ளத்தொடர்பு ஏதேனும் இருந்ததா அல்லது அது வெறும் சந்தேகமாக மட்டுமே இருந்ததா என்பது இன்றும் ஒரு புதிராகவே உள்ளது.
எனினும், மனைவியின் அந்தத் திடீர் உணர்ச்சிவேகச் செயலின்போது, முச்சக்கர வண்டியை நிறுத்தி அவளது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்காமல், மரணம் சம்பவிக்க அனுமதித்தமை எனும் கவனக்குறைவு குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னர், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பார்கள்.

