கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA), 2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வலுவான செயல்பாட்டு செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. இது,நாட்டிற்கு வரும் பயணிகள் போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
விமான நிலைய தகவலின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் விமான நிலையம் மொத்தம் 4,748,481 பயணிகள் போக்குவரத்தைக் கையாண்டுள்ளது.
விமான போக்குவரத்துகள்
அதே காலகட்டத்தில், 30,659 விமான போக்குவரத்துகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன், நாட்டின் பிரதான சர்வதேச நுழைவாயில் வழியாக 424,856 இடைவழிப் பயணிகள் பயணித்துள்ளனர்
மேலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்றும் விமான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இது, நாட்டின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான மீட்சி மற்றும் வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சுற்றுலாத் தொழில்
அரையாண்டு செயல்பாட்டுத் தகவலைப் பகிர்ந்துகொண்ட விமான நிலையம், இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தொழில்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதோடு, மக்களையும், கலாசாரங்களையும், வாய்ப்புகளையும் தொடர்ந்து இணைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேலும் பல மைல்கற்களை எட்டுவதில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அந்த விமான நிலையம் கூறியுள்ளது.

