ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை
வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். அவர்களின் எண்ணிக்கை 236,916 ஆகப் பதிவாகியுள்ளர்
இதற்கு மேலதிகமாக பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, மே மாதம் 1 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 113,755 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

