வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது.
இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% சுங்க வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

