ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
தலைநகர் கீவ் (Kyiv)மற்றும் பிற நகரங்கள் மீது கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை முதல் ரஷ்யா 1,567 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கீவ் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

