திருநெல்வேலியை சேர்ந்த 11வயதில் தனக்குரிய இணைய தளத்தை 24 மணித்தியாலத்தில் மாணவி ஒருவர் வடிவமைத்து அசத்தியுள்ளார். தனது 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியுள்ளார். உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்த தமிழ் சிறுமி! அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Visalini Is The Most Intelligent Girl In The World இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணித்தியாலம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது. உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்த தமிழ் சிறுமி! அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Visalini Is The Most Intelligent Girl In The World HCL நிறுவனம் The Pride of India – விசாலினி என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி. Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian – விசாலினி என அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது. உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்த தமிழ் சிறுமி! அப்படி என்ன செய்தார் தெரியுமா? | Visalini Is The Most Intelligent Girl In The World நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா., உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு வயது 13 தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு, அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உங்களது மகளை சந்திக்க விருப்புவதாக தெரிவித்திருந்தனர், பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம். என்றார் பிரதமர் மோடி. விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறு வயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம். உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர். இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுவோம். என முகநூலில் Lawyer Lawyer Senthilkumar என்பவர் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

