வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்றிரவு (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் மற்றும் 30 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஏ9 வீதியின் ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

