யாழ்ப்பாணம் காங்கேசன்துறைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேருமே பைபர் படகில் இந்திய எல்லைக்குள் சென்றுள்ளனர்.
இதன்போது பைபர்படகு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும் இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் பொலிஸார் கைது செய்து இவர்கள் மீன்பிடிக்க வந்தனரா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என்ற சந்தேகத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

