அண்மையில், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து ஒரு விந்தையாகவே இருந்தது எனலாம்.
அவர், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த இரண்டே விடயங்கள் தான் தேவை என குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உடலும் போதும் இந்த நாட்டை கட்டியெழுப்ப என குறிப்பிட்டிருந்தார்.
இது உண்மையில் அரசியல் மற்றும் சமூக ஊடக பரப்பில் பெரும் கேலிக்குரிய விடயமாக மாறியிருந்தது.

