ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (03) கூறியுள்ளார்.
எனினும், எந்தெந்த நாடுகளுக்கு உதவி வழங்கப்படும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிடவில்லை.
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முயற்சிக்கு 15,000 இராணுவ வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வழிகாட்டுவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு போர் நிறுத்தத்தை மீறுவதாக அமையும் என்று ஈரான் அதிகாரிகள் இன்று (04) எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, ட்ரம்பின் கருத்துகளுக்குப் பின்னர், ஹார்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 8 அன்று ஈரான் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன,
மேலும் தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் ஈரான் தனது பிடியை இறுக்கியிருப்பது ஒரு முக்கிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.
மோதலின் போது நூற்றுக்கணக்கான கப்பல்களாலும், சுமார் 20,000 மாலுமிகளாலும் நீரிணையை கடக்க முடியது சிக்கித் தவித்துள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.

