வெள்ளவத்தையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த விடுதியில் ஆறு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை நேற்று இரவு சுற்றி வளைத்தபோது குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

