10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், கொழும்பு 12, மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதியொன்றை வழங்குவதற்காக 10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
சந்தேகநபர், கொழும்பு 12, மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

