திருமணத்துக்குப் புறம்பான தகாத உறவில் இருந்த பெண்ணொருவர் 4 வயது மகளை கொலை செய்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயது தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
இந்தியா கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டிட வேலைகளுக்கு சென்றுவரும் போது ஒருவரை காதலித்து வந்துள்ளார்
இந்நிலையில் காதலுக்கு தடையாக குழந்தை இருப்பதாக உணர்ந்து பெற்ற தனது 4 வயது மகளை ‘காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்
கோவையைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது

