முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகுவதாக இன்று (27) அறிவித்துள்ளார்.
சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜயந்த என்ற இருவரும் சமூக வலைதளமான பேஸ்புக்கில் தனது மீது கருத்து பதிவிட்டதை தொடர்ந்து, நீதிபதி இந்த முடிவை எடுத்ததாக திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க பொருத்தமான புதிய நீதிபதியை நியமிக்க, வழக்கு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திக்கே முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த வழக்கு, நாட்டில் அரசியல் மற்றும் நீதித்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விவகாரமாக பார்க்கப்படுகிறது.