தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி கடற்றொழிலுக்குச் சென்ற 22 இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.இரண்டு படகுகளில் இவர்கள் கடந்த 21ஆம் மற்றும் 23ஆம் திகதியும் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இந்த 2 விசைப்படகுகளும் நேற்று பிற்பகல் இலங்கைக்கு நடுநிலை எல்லை வழியாக சர்வதேச கடற்பகுதி பகுதியில் சென்றபோது சீரற்ற வானிலை, கடல் நீரோட்டங்கள் காரணமாக இலங்கை கடற்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், அங்கு கண்காணிப்பு பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப் படகுகளுடன் 22 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

