வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவரை் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாட்டை தொடர்ந்து கிளிநொச்சி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் பின்னர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

