30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்படி, அரச நிறுவனங்களுக்கான வேதன முறைமையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கான கொள்முதல்” (Procurement of Design> Development and Implementation of a Payroll System for Government Organizations) என்ற கேள்விப்பத்திர அறிவிப்பை நிதியமைச்சின் மாநிலக் கணக்குகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தற்போதைய ஜி.பி.எஸ் முறைமை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இது அமைச்சகங்கள், திணைக்களங்கள், சிறப்புச் செலவின அலகுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சில சட்டபூர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதைய முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இதன் பலவீனமான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளுதல்கள் மற்றும் வேதனம் தொடர்பான மோசடி அபாயங்களுக்கு உட்படுத்துகின்றன, இது அரசு நிதிக்கூறுகளின் நம்பகத்தன்மையை மற்றும் செயல்திறனைக் குலைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய முறைமையில் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் வேதன முகாமைத் தளமாகச் செயற்படத் தேவையான நெகிழ்வுத்தன்மையும் அளவிடக்கூடிய தன்மையும் இல்லை, இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் தடைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வேதன செயலாக்க முறைமைக்கு மாறுவதற்கான தேவை அவசரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

