நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை முதலே கொட்டித் தீர்த்த கனமழையையும் பொருட்படுத்தாது, மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

