வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக ஏ9 வீதி, மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகன சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.