மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ் நிலையத்தின் தலைமை காவலராக பணியாற்றிவரும் 33 வயதுடைய விக்னேஷ் என்பவர் இன்று(.23) தரங்கம்பாடி தாலுகா பொறையார் தனியார் பாடசாலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் .
இதன்போது அங்கு வந்த நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சரமாரியாக குத்தி உள்ளார்.
தாக்குதலால் விக்னேஷூக்கு கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
தகவல் அறிந்து வந்த பொலிஸார் விக்னேஷை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர்.
பின்னர் பொறையார் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் பிரபாகரன் என்பதும் அவர் மீது ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி ஊடகத்தின் போது பொலிசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

