கொரோனா வைரஸ் தொற்று என்பது எப்பொழுதும் நிரந்தரத் தொற்றாக (endémique) இருக்கப் போகின்றது» என இன்றைய ஊடசக் செவ்வியில் Saint-Antoine வைத்தியசாலையின் தொற்றியற்துறையின் தலைவரும், தொற்றியல் ஆராய்ச்சியாளருமான கரின் லாக்கோம்ப் (Karine Lacombe) எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் நம் அனைவரிற்கும் கொரோனத் தடுப்பு ஊசிகள் விரைவாகப் போடப்பட்டால், இந்த நிரந்தரத் தொற்றை நாம் ஒரு தடிமன் காய்ச்சல் போல் எதிர்கொள்ள முடியும். நம் அனைவரிற்குள்ளும் முறையான நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனத் தடுப்பூசி மூலம் ஏற்படுத்திக் கொண்டால் இதை எதிர் கொள்ள முடியும்»
«ஆனாலும் இன்னமும் எம்மால் எதனையும் உறுதியாகச் சொல்ல முடியாது. நிரந்தர கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை (immunité collective) நாம் இன்னமும் உருவாக்கவில்லை. கொரோனத் தடுப்பு ஊசி போடுதலின் வேகமற்றதன்மையால், இதனை எதிர்கொள்ளும் சக்தி எம்மிடம் உள்ளதா என்ற கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை என கரின் லாக்கோம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனப் பரவல் இன்னமும் வேகமாக இருக்கும் நிலையில், புதிய மரபணுத் திரிபு வைரஸ்களின் ஆபத்து, முக்கியமாக இந்தியத் திரிபு வைரசின் ஆபத்து மிக வேகமாக உள்ள நிலையில், 18 – 50 வயதிற்கு உற்பட்டவர்களிற்கான தடுப்பு ஊசிகளை தள்ளிப் போடும் நிலையில் இன்னமும் பேராபத்து நம்மிடையே உள்ளது.