ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு மிக்க பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் மஹிந்த ரஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.
ஈரான் அரசின் அழைப்பின் பேரிலேயே நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் புர்கினா பாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, இலங்கை, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மேனியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், துணை ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.