இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சிறுபோகத்தில் 4,74,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் அறுவடை செய்த 7,28,185 விவசாயிகளும், நெல் நிலங்களில் 6,440 ஹெக்டேர் பரப்பளவில் இதர களப் பயிர்களைச் அறுவடை செய்த 14,677 விவசாயிகளும் இந்நிதிப் பலன்களைப் பெறவுள்ளனர்
அதிகரிக்கப்பட்ட உர மானியம்
இந்நிலையில், சிறுபோகத்திலன் தொடக்கத்திலேயே உர மானியத் தொகையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதனடிப்படையில், நெல் நிலங்களில் இதர பயிர்களைச் அறுவடை செய்வதற்கான மானியமாக ஹெக்டேருக்கு ரூ. 15,000-லிருந்து ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சிறப்புத் திட்டம்
மேலும், சந்தையில் உரத் தட்டுப்பாடு ஏற்படுவததைத் தவிர்க்கவும், விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள 566 விவசாய சேவை மையங்கள் மூலம் 50 கிலோகிராம் எடையுள்ள யூரியா உர மூட்டை ரூ. 10,200 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

