இளம் குடும்பப் பெண்ணை அலவாங்கால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரின் கணவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வத்தளைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் மரணமடைந்த 28 வயதுடைய பெண் அரச வைத்தியசாலை ஒன்றில் தாதியாகப் பணிபுரிந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மூன்று வயதுடைய ஆண் குழந்தையின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையாளியான கணவனைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் ராகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

