அரசாங்கத்தின் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான வீடுகளைக் கையளிக்கும் மற்றும் புதிய வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் இன்று (14) நடைபெற்றது.
கும்புறுப்பிட்டி, நாவற்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அதன் பயனாளிக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
வாழைஊற்றுப் பகுதியில் புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது.

