யாழ்ப்பாணம், அனலைதீவு கடற்பகுதியில் 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில் வைத்து வாங்கி வரும்போது கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை 4.00 மணியளவில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பேசாலை மற்றும் காரைநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

