பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பிஎன்எஸ்) ‘ஷாஜஹான்’ நேற்று (ஜூன் 02) காலை முறைப்படி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
PNS ‘ஷாஜஹான்’ என்பது 134 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பல் ஆகும், இது 169 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது.
இந்த கப்பலுக்கு அட்னான் லகாரி டிஐ கேப்டனாக தலைமை தாங்குகிறார். கப்பலின் கட்டளை அதிகாரி இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
மேலும், இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் குறித்த கப்பலின் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அவர்கள் இலங்கையில் உள்ள சில சுற்றுலாத் தலங்களுக்கும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பிலிருந்து இலங்கை கடற்படைக் கப்பலுடன் கடவுப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘ஷாஜஹான்’ ஜூன் 04 அன்று இலங்கையை விட்டுப் புறப்பட்டவுள்ளது.