மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.
சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு (45-50) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக திருகோணமலை வரையிலும் உள்ள கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.