இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று (23) நிறைவடைந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி இன்றைய ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களையும், அணித்தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் கேசர நுவந்த ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

