இந்த ஆண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது.
அதன்படி, 2025 ஜனவரி 1 முதல் ஜூலை 27 வரை 1,341,953 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.
அவர்களின் எண்ணிக்கை 274,919 ஆகும்.
மேலும் பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வழங்கிய தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் கடந்த 27 நாட்களில் 173,909 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

